Friday, August 06, 2010

இரயில் பயணம்

காலங்கள் முன் செல்ல
நினைவுகள் பின் சென்றன
இரயில் பயணம்!!!


காணாமல் போன கண்ணையாவும்
வேலை வாய்ப்பு கொடுக்கும் விளம்பரமும்
ஊதியம் உயர்வு கேக்கும் போராட்டமும்
விளம்பரம் செய்யாதே எச்சரிக்கையும்
மறைக்கத்தான் செய்கின்றன!
அவன் அவளுக்கு எழுதிய கவிதைகளை!

இரயிலின் ஓசையை தாண்டி
கை பேசியில் இசையை தாண்டி
கூட்டதின் கூச்சலை தாண்டி
பல முகங்களை தாண்டி
சில மொழிகளையும் தாண்டி
பேசிக்கொண்டன இருவரின் கண்கள்
மௌனமாய்!

மஞ்சலும் பச்சையும் சிவப்புமாய் இருந்து
இரயிலும் மாரியது
விளம்பரச் சுவராய்!
தன் ஆழகை மறைத்து

நல்லவனையும் கெட்டவனையும்
பணக்காரனையும் பரதேசியையும்
ஆழகாணவனையும் அவலமானவனையும்
கண் இல்லாதவனையும் கண்ணாடி அணிந்தவணையும்
உன்னையும் என்னையும்
அரவணைத்துதான் செல்கிறது இரயில்
பாராபட்சம் இன்றி!


கவிதையாக எழுதவில்லை
மனதில் தோன்றியது மட்டுமே

P.S.: Do point out the mistakes.